Saturday 4th of May 2024 10:07:40 AM GMT

LANGUAGE - TAMIL
.
வவுனியாவில் முன்னாள் வன்னி பா.உறுப்பினர் காலமானார்!

வவுனியாவில் முன்னாள் வன்னி பா.உறுப்பினர் காலமானார்!


முன்னாள் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் கே. பாலச்சந்திரன் இன்று (22) மாரடைப்பால் காலமானார்.

வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 2.30 மணியளவில் இவரின் உயிர் பிரிந்துள்ளது.

1994 முதல் 2000 ஆம் ஆண்டு வரை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் சார்பாக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கே. பாலச்சந்திரன் கண்டியை பிறப்பிடமாக கொண்டவராவார்.

வவுனியாவில் வசித்து வந்த இவர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் வவுனியாவில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த இவர் தனது 69 ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE